Sunday, April 15, 2012

Trapnet Fishery in Palk Bay (பாக் நீரிணைப்பில் அடைப்பு வலை மீன்பிடிமுறை)


அடைப்பு வலையின் மர ஊன்று கால்களில் ஒன்றை, கடலுக்கு அடியில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.





அடைப்பு வலைக்குள் மாட்டிகொண்ட மீன்களை பிடிக்கும் முறைகள்.







வலைக்குள் இறங்கி கையினால் பிடித்த கடல் கெழுத்தி மீன் 








மேற்கண்ட படம், கடல் சூழல் மண்டலங்களை பாதுக்காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த அடைப்பு வலை மீனவரின் வலைகளை உற்று நோக்கினால், கடல் தாழைகள் (seagrass) சிக்கி உள்ளதை காணலாம். இதன் மூலம் இப்பகுதியில் நிறைய கடல் தாழைகள் உள்ளன என்பதை அறிய முடிகிறது.  இவை மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் மருத்துவமனைகளாக விளங்குகின்றன.  எனவே, கடலில் மீன்பிடி தொழில் சிறப்பாக இருக்க இந்த கடல் தாழைகள் அவசியமாகும்.  மேலும், இந்த படத்தை இன்னும் சற்று உற்று நோக்கினால், தொலைதூரத்தில் மங்க்ரோவ் (mangroves) காடுகள் இருப்பதை காணலாம். இந்த கடலோர காடுகளில் இருந்து வரும் மக்கிய சத்து பொருட்கள், கடல் தாழைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  மேலும், கடல் தாழைகளில் உற்பத்தியாகும் கடல் இறால்கள், மீன்கள் மற்றும் நண்டுகள் அந்த காடுகளின் வேர்ப்பகுதிகளுக்கு சென்று உணவு தேடுவதால், கடல் கரையோரம் மீன்பிடி தொழில் செய்யும் சிறு மற்றும் ஏழை மீனவர்களின் வாழ்வை ஆதாரமாக்கும் அர்த்தமுள்ள பணியை இந்த கரையோர காடுகளும், கடல் தாழைகளும் சத்தமின்றி செய்து வருகின்றன. 

No comments: