முதுமை - 4
இறைவா !
முதுமையில் முடியும்
ஒருவழிப்பாதையில்...
வெள்ளத்தில் செல்லும்
எறும்பாய்
மானிடர் நாங்கள்,
மீண்டும் ஒருமுறை
காலம் சென்றோரை காண
வரம் தா இறைவா!
முதுமை இட்டு செல்லும்
மூப்பின் மறுபக்கம்
எப்படி இருக்கும் என
அவர்களிடம் கொஞ்சம் கேட்க வேண்டும்.
காலத்தின் கோலத்தில்
இழந்த அன்பான உறவுகளை...
நெருங்கிய நண்பர்களை....
சொல்ல மறந்த விளக்கங்களை...
தயங்கிய காதல்களை...
கொடுக்க மறந்த கடிதங்களை...
வாங்க மறந்த கடன்களை...
செல்ல எண்ணிய கோவில்களை..
கேட்காத மன்னிப்புகளை..
அன்போடு பேச மறந்த உடன்பிறப்பை
அஞ்சறைப் பெட்டிக்குள் சேமித்த கனவுகளை..
அப்பாவின் புரியாத டைரி கணக்குகளை
ஒரு முறையேனும் கண்டு கேட்க,
கோபமாய் திரும்பி கொள்ள,
ஒரு நொடி வரம் தா இறைவா!
இளமையில் இருந்த அவர்களிடம்
செல்லமாய் கோபிக்ககூட ஆளில்லா..
இம்முதுமையின் களைப்பையும்,
தனிமைத் துயரையும் பகிர
வரம் தா இறைவா!
- Balaji Vedharajan
image: Gemini
No comments:
Post a Comment