Friday, September 12, 2025

கற்றதோ சிறு கடலறிவு.

கற்றதோ சிறு கடலறிவு. 
பெற்றதோ நுனித் துரும்பளவு,

நிற்பதோ நின் தாள் நோக்கி -
சிந்தையில்,

கொண்டதோ சிவத்தொண்டு.
ஓம்காரமாய் பற்றியதோ 
உம்  கழல்,

ஈட்டியதோ உம் அருள்  தவிர்த்து ஒன்றுமில்லை!
நெற்றியில்,

இட்டதோ உம் திருநீறும், 
ஆக்கினையும்,

யாக்கையதில் - தீ 
சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும்.

உயிர் 
விண்டதும் - சுடலைத் தணலில்,

தெளித்த பால் 
பட்டதும் பந்தம் நீங்க,

கரையினின்று 
விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி 
பட்டென உடைபடும் நீறுநிறை கலமும்
என்பும் உறவும்.

பிறவி
கட்டவிழ்த்து,
நின் நினைவில் 
ஆழ்ந்து - எண்ணத்தில்

எட்டா  இறை கலந்து உள்ளுருகும் 
அடியெனின் சடையானே! 

கலப்பேன் யான் உன்னுடனே,
ஒரு பிடி எரி நீறாய்... 
தில்லையனே!

நீலக்  கடலானே!

நீ அறிவாயோ, 

அடியேன் எம் தவத்தை? 🙏

Balaji Vedharajan

No comments: