கற்றதோ சிறு கடலறிவு.
பெற்றதோ நுனித் துரும்பளவு,
நிற்பதோ நின் தாள் நோக்கி -
சிந்தையில்,
கொண்டதோ சிவத்தொண்டு.
ஓம்காரமாய் பற்றியதோ
உம் கழல்,
ஈட்டியதோ உம் அருள் தவிர்த்து ஒன்றுமில்லை!
நெற்றியில்,
இட்டதோ உம் திருநீறும்,
ஆக்கினையும்,
யாக்கையதில் - தீ
சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும்.
உயிர்
விண்டதும் - சுடலைத் தணலில்,
தெளித்த பால்
பட்டதும் பந்தம் நீங்க,
கரையினின்று
விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி
பட்டென உடைபடும் நீறுநிறை கலமும்
என்பும் உறவும்.
பிறவி
கட்டவிழ்த்து,
நின் நினைவில்
ஆழ்ந்து - எண்ணத்தில்
எட்டா இறை கலந்து உள்ளுருகும்
அடியெனின் சடையானே!
கலப்பேன் யான் உன்னுடனே,
ஒரு பிடி எரி நீறாய்...
தில்லையனே!
நீலக் கடலானே!
நீ அறிவாயோ,
அடியேன் எம் தவத்தை? 🙏
Balaji Vedharajan
No comments:
Post a Comment