அருவ அரணே!
அன்பின் உருவே,
அனைத்திற்கும் ஆதாரமே,
எம் சிவனே!
அடியாரை ஆளும்,
நின்சக்தியின் வெளிப்பாடே
அனைத்துயிரினமே!
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்,
மறைத்தல்,
அருளல் என
அனைத்தும் நின்செயல் எனும்,
சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார்
சிந்தனைக்குள் சிக்காத
சிவபரம்பொருளே!
இமயத்தின் ருத்ரனே!
தென்னகத்தின் சிவனே !
சோழரின் பெருமையே!
ஆன்மிகத் தமிழ் வளர்த்த,
அடியாரின் அண்ணலே!
நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும்
இப் பாரதத்தின் பரம்பொருளே!
அருவமாய் முனிவர்க்கு,
அருளும் சித்தானந்த,
ஆன்மிக பரம்பொருளே!
ஒளிப்பிழம்பே!
திருவுருவமாய் பக்தர்க்கு,
திருமேனியில்,
தில்லையிலுறையும் நடராசனே !
அருவுருவமாய் விளங்கும் என
அடியார் நல்வாக்கின்படி,
அடியேனின் சிற்றறிவுக்கு
விளங்கா ஒளி விளக்கே,
உனை என்று காண்பேனோ ?🙏🙏
Balaji Vedharajan
No comments:
Post a Comment