Monday, November 24, 2025

அருவ அரணே!
அன்பின் உருவே,
அனைத்திற்கும் ஆதாரமே, 
எம் சிவனே!
அடியாரை  ஆளும்,
நின்சக்தியின் வெளிப்பாடே 
அனைத்துயிரினமே! 

படைத்தல்,
காத்தல்,
அழித்தல், 
மறைத்தல், 
அருளல் என 
அனைத்தும் நின்செயல் எனும், 
சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார் 
சிந்தனைக்குள்  சிக்காத
சிவபரம்பொருளே! 

இமயத்தின் ருத்ரனே! 
தென்னகத்தின் சிவனே !
சோழரின் பெருமையே!
ஆன்மிகத் தமிழ் வளர்த்த,  
அடியாரின் அண்ணலே!
நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும் 
இப் பாரதத்தின் பரம்பொருளே! 

அருவமாய் முனிவர்க்கு, 
அருளும் சித்தானந்த,
ஆன்மிக பரம்பொருளே!
ஒளிப்பிழம்பே!
  
திருவுருவமாய் பக்தர்க்கு, 
திருமேனியில்,
தில்லையிலுறையும் நடராசனே !

அருவுருவமாய் விளங்கும் என 
அடியார் நல்வாக்கின்படி, 
அடியேனின் சிற்றறிவுக்கு 
விளங்கா ஒளி விளக்கே, 
உனை என்று காண்பேனோ ?🙏🙏

Balaji Vedharajan

No comments: