Wednesday, January 4, 2012
Tuesday, June 21, 2011
The beautiful mermaid - her sad end in our coast
Wednesday, June 1, 2011
அற்புத கடல் நீரோட்டங்களில் சில அனுபவங்கள்
உலக கடல் பரப்பை பெருங்கடல்களாகவும் (ocean), கடல்களாகவும் (sea) பிரிக்கலாம். இதில் பெருங்கடல்களின் ஒரு சிறு பகுதியே கடல்கள் ஆகும். உதாரணத்திற்கு இந்திய பெருங்கடலின் ஒருசிறு பகுதியே வங்காள விரிகுடா கடல் ஆகும். இப்படி பல பெயர்களால் நாம் பிரித்து வைத்தாலும், மற்ற எல்லா பெருங்கடல்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டே உள்ளன
எனவே, நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து நேராக தெற்கு நோக்கி சுமார் 8,000 கிலோமீட்டர் ஒரு படகில் பயணித்தால், எந்த தடையுமின்றி பெங்குயின் பறவைகள் வாழும் பனி படர்ந்த அண்டார்டிகாவில் சென்று கரை ஏறலாம். இந்த தூரம் நமக்கு மலைப்பாக இருந்தாலும், கடல் ஆமைகளும், திமிங்கலங்களும் கம்பன் எக்ஸ்பிரசில் சென்னையிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வருவதை போல பல இடங்களுக்கு சர்வ சாதாரணமாக பயணிக்கின்றன. இதில் ஒரு சின்ன வித்தியாசம், இந்த கடல் விலங்குகள் கம்பனுக்கு பதில் கடல் நீரோட்டத்தில் பயணிக்கின்றன.
கடல் நீரோட்டங்கள் வலிமையானவை. அவற்றின் நீளமும், அகலமும், உலகில் ஓடும் எந்த ஒரு ஆற்றின் அளவையும் விட மிக பெரியதாகும். மழைக்காலங்களில் நம் ஊர் ஆற்றில் ஓடும் நீரின் வேகத்தையும், வளைந்து நெளிந்து செல்லும் அதன் இயல்பையும் நாம் நன்றாக பார்க்கமுடியும். ஆனால், பூமியின் 29% மேற்பரப்பை மட்டுமே மூடியுள்ள நிலத்தில் வாழும் நாம், பூமியின் 71% மேற்பரப்பை நீலவண்ண நீர்போர்வையாக போர்த்தியுள்ள க்டலில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரம்மாண்டமான கடல் நீரோட்டங்களை நம்மால் கரையிலிருந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதில்லை.
கடலின் ஒவ்வொரு துளி நீரும் காற்றினால் தள்ளப்படுவதாலும், உப்பு தன்மை மற்றும் வெப்பநிலை மாறுபாட்டாலும், சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மாறுபாட்டாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, சென்னை மெரினா கடற்கரையில் உங்கள் கால்களை நனைத்து செல்லும் கடல் நீர் இதற்கு முன்பு அண்டார்டிகாவிலோ பசுபிக் பெருங்கடலிலோ இருந்திருக்கலாம். அதாவது, உடலின் எல்லா பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதை போல கடல் நீரோட்டங்கள் கடலின் உயிரோட்டமாய் உலகெங்கிலும் ஓடுகின்றன. இந்த வேலிய்ற்ற மாபெரும் கடற்பரப்பில், ஆர்க்டிக் முதல் அன்டார்டிக் வரையிலும், இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் கடல் நீரோட்டங்கள் ஒரு கன்வேயர் பெல்ட் போல தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கின்றன. இந்த கடல் கன்வேயர் பெல்டில் மீன்களும், நண்டுகளும், ஆமைகளும், திமிங்கலங்களும் சுறாக்களும் இலவசமாக பயணித்து இனப்பெருக்கம் செய்ய பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இதன் காரணமாகவே, குறிப்பிட்ட கடல் நீரோட்டங்கள் பாயும் குறிப்பிட்ட சீசனில் மட்டும் அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, வடகிழக்கு பருவக்காற்று எனப்படும் வாடைக்காற்று வீசும் மாதங்களில், வடக்கிலிருந்து தமிழகத்தின் கரையோரமாக வன்னி வெள்ளம என்ற நீரோட்டம் வலிமையுடன் ஓடுகிறது. வாடை காற்றினால் தள்ளப்படும் இந்த வன்னி வெள்ளம் பலவிதமான மீன்களையும், நண்டுகளையும், இறால்களையும் அள்ளி கொண்டு வந்து கோடியக்கரை பகுதியில் குவிப்பதால் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) பலகோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடித்தொழில் இங்கு நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் இந்த சீசனில் இங்கு வந்து தங்கி மீன்பிடித்து செல்கின்றனர்
.காற்றினால் உருவாகும் இந்த நீரோட்டத்தை போல, கடல் நீரின் வெப்பநிலை மாறும்போதும் நீரோட்டம் உருவாகிறது. சாதாரண தண்ணீர் 0 (ஜீரோ டிகிரி) யில் உறைந்து விடும் ஆனால் கடல் நீரில் உப்பு இருப்பதால் -4 (மைனஸ் நான்கு டிகிரி) யில் மட்டுமே உறைந்து பனிக்கட்டியாகும். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற துருவப்பகுதிகளில் உள்ள கடல்நீர் பனிக்கட்டியாக மாறாமல், அதே சமயம் குளிர்ச்சியாகவும், அடர்த்தி அதிகமாகவும் இருப்பதால் எடை அதிகரித்து கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. இந்த குளிர்ந்த கடல் நீர் கடல் அடிப்பகுதியில் ஆழ்கடல் நீரோட்டமாக மாறி பூமத்திய பகுதி நோக்கி மெதுவாக நகர்கிறது. இதனால் துருவ கடல் பகுதியின் மேல்பரப்பில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, பூமியின் வெப்பமான மத்திய பகுதியில் உள்ள கடல் நீரானது ஒரு மேல்பரப்பு வெப்ப நீரோட்டமாக மாறி துருவத்தை நோக்கி ஓடுகிறது. ஒரு மாபெரும் நீர்சக்கரம் மிக மெதுவாக சுழல்வதை போல இந்த நிகழ்வு கடலுக்கடியில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வெப்ப அல்லது குளிர் நீரோட்டங்கள் பயணிக்கும்போது, அதன் வெப்பமோ அல்லது குளிர்ச்சியோ காற்றுக்கு கடத்தப்பட்டு, அதனருகில் உள்ள நாடுகளின் வெப்பநிலையை மாற்றுகின்றன.
நடுக்கடலின் மேற்பரப்புநீர் கண்ணாடி போன்று மிக தெளிவாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் காணப்படும். எனவே ஆங்கிலத்தில் இதை நீலப்பாலைவனம் (blue desert) என்று அழைப்பார்கள். நிலத்தில் ஓடி கடலில் பாய்கின்ற ஆற்றின் மூலமாகவோ அல்லது கடல் நீரோட்டங்கள் மூலமாகவோ மட்டுமே இந்த கடல் நீர் சத்து மிகுந்ததாக மாற்றப்படுகிறது. நாம், முதலில் குறிப்பிட்ட ஆழ்கடல் நீரோட்டங்கள், கடலின் அடிப்பகுதியில் செல்லும்போது கடலடி பரப்பில் படிந்துள்ள ஊட்டசத்துக்களை கிளறி தன்னுடன் இழுத்து செல்கிறன. இவை, ஆழம் குறைவான கரைப்பகுதியில் மோதும்போது மேலே எழும்பி, ஆழ்கடலின் சத்துபொருட்களை மேலே கொண்டு வருகின்றன. இந்த செயலினால், கடல்நீர் வளமிக்கதாக மாறி அதில் ஏராளமான நுண்ணிய தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் உற்பத்தி ஆகின்றன. அதை தொடர்ந்து, இவற்றை சாப்பிட கூடிய சிறு மீன்களும் பெரிய மீன்களும் உற்பத்தியாகி கடலின் மீன்வளம் அதிகரிக்கின்றது, இதனால் மீன்பிடி தொழிலில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொருவருடமும் மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில், கடல்நீரோட்டங்கள் கேரள கடற்கரையை நோக்கி கடலடியில் படிந்துள்ள சத்துப்போருட்களை மேலே கொண்டு வருகின்றன. இதனால் பெருகும் சிறு உயிரினங்களை சாப்பிட்டு, இறால்கள் மற்றும் மத்திக்கவளை மீன்கள் ஏராளமாக உற்பத்தி ஆகின்றன. இந்த சீசனில் பெருமளவில் பிடிக்கப்படும் இந்த வகை இறால்களும் மீன்களும், அம்மாநில கடலோர கிராம பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த கடல் நீரோட்டங்கள் அனைத்தும் ஒரே விதமான வேகத்தில் இருப்பதில்லை. தீவுகளுக்கு இடையே ஓடும கடல் நீரோட்டங்களும், இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள நீரிணைப்பில் ஓடும் கடல் நீரோட்டங்களும் அதி வேகமானவை. கடந்த 2009 ஆம் வருடம், பிலிப்பின்ஸ் நாட்டிற்கு செல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது தீவுகளுக்கு இடையே அதிவேக நீரோட்டங்களில் மாட்டிகொண்ட அனுபவம் எனக்கு ஏற்பட்டது. சுமார் ஏழாயிரம் தீவுகள் கொண்ட அந்த நாட்டில் நெக்ரோஸ் என்ற தீவுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய குட்டி தீவுக்கு செயற்கையாக பவளப்பாறைகள் வளர்க்கப்படுவதையும், ஜெயன்ட் க்ளாம்ப்ஸ் (giant clams) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய சிப்பி வகைகள் இருப்பதையும் பார்ப்பதற்காக ஒரு குழுவாக சென்றோம். எங்கள் குழுவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர்களும், சுற்று சூழல் ஆர்வலர்களும் வந்திருந்தனர். வெள்ளை நிற மணலும், பளிங்கு போன்ற தண்ணீருடனும் மிகவும் ரம்யமாக காட்சியளித்த அந்த தீவை சுற்றி அலைகளே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.
நீளவாக்கில் இருந்த அந்த தீவிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் வளர்க்கப்படும் இடம் இருப்பதாக எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி சொன்னார். ஆர்வகோளாறில் நானும் என்னுடன் வந்திருந்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு நண்பர்களும் சிலிண்டர் போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அதை பார்ப்பதற்காக நீந்த துவங்கினோம். காலில் துடுப்பும் முகத்தில் நீரடி கண்ணாடியும் அணிந்து இருந்ததால், அவ்வபோது கடலுக்குள் மூழ்கி சென்று மீன்களையும், பவளப்பாறைகளையும் ரசித்து கொண்டு உற்சாகத்துடன் நீந்தி சென்று கொண்டு இருந்தோம். அரைமணி நேரத்தில் செயற்கை பவளப்பாறை வளர்க்கும் இடத்திற்கு நீந்தி வந்தடைந்தோம். அங்கு சுமார் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டு இருந்த செயற்கை பவளப்பாறைகள் கூண்டை சுற்றிலும் ஏராளமான மீன்கள் நீந்தி கொண்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து, இளைப்பாற எந்த வழியும் இல்லாததால் மூவரும் தொடர்ந்து நீந்தி மீண்டும் கரைக்கு வர முடிவு செய்தோம்.
ஆனால், நாங்கள் வரும்பொழுது இருந்ததை விட கடலின் நீரோட்டம் திசை மாறி, வேறு திசையில் வேகமாக இழுப்பதை அப்போதுதான் உணர ஆரம்பித்தோம். நாங்கள் கிட்டதட்ட தீவின் முனைப்பகுதிக்கு நீந்தி வந்துவிட்டதால் நீரோட்டத்தில் நடுவில் நன்றாக சிக்கி கொண்டோம். நம் ஊர் ஆற்றில் தண்ணீர் ஓடுவதை போன்ற அதன் வேகத்தில் ஒரு அடி எதிர்த்து நீந்தினால் நான்கு அடி பின்னோக்கி தள்ளியது. அதற்கு மேல் எதிர்த்து நீந்த முடியாது என்பதால் அதன் போக்கிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீந்தி சென்றோம். அதிர்ஷ்டவசமாக, நீளமான அந்த தீவின் கரைக்கு இணையாக நீரோட்ட திசை இருந்ததால், அதன் வழியாகவே நீந்தி சென்று தீவின் மற்றொரு இடத்தில் கரை சேர்ந்தோம். பலர் இப்படி நீரோட்டங்களில் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் உலகெங்கும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நிலையில் தைரியமாக இருப்பதும், நன்றாக நீச்சல் தெரிவதும் மட்டுமின்றி கடலின் இயல்பை பற்றிய அறிவும் இருந்தால் தப்பி உயிர் பிழைக்க முடியும்.
கோடியக்கரைக்கும் யாழ்பாணத்திற்கும் இடையில் உள்ள 55 கி.மி குறுகிய கடலில் ஒரு வலிமையான நீரோட்டம் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் மாறி மாறி எப்போதும் ஓடி கொண்டு இருக்கின்றது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான மீனவர் கூறியபடி “நீரோட்டத்தை எதிர்த்து இந்த பகுதியில் ஒரு படகை அதன் முழு வேகத்தில் இயக்கினாலும், அது ஒரு அடி முன்னேறி செல்வது கூட மிக கடினமாக இருக்கும். மேலும், ஒரு படகு விபத்தில் ஆழமற்ற பகுதியில் மூழ்கினால் கூட உடனே அதை கரைக்கு கொண்டு வந்து விட வேண்டும், இல்லையெனில் நீரோட்டத்தினால் அரித்து வரப்படும் மணல் அதை வேகமாக மூடிவிடும்” என்று கூறினார். இந்த வார்த்தைகள் கடல் பற்றிய அவரின் ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மீனவர்களுக்குள்ள பரம்பரையான கடல்சார் அனுபவ அறிவை எண்ணி வியக்கும் அதே வேளையில், கடல் வழியாக படையெடுத்து சென்ற பண்டைகால தமிழக மன்னர்களும், திரை கடல் ஓடி திரவியம் தேடிய பழந்தமிழர்களையும் எண்ணிப்பார்த்தால், அவர்களுக்கு இந்த கடல் நீரோட்டங்கள் பற்றிய அபாரமான அறிவு இருந்திருக்க கூடும் என உணர முடிகிறது.
இந்தோனேசியாவில் பேசப்படும் பாலி என்ற மொழியை தாய்மொழியாக கொண்ட என்னுடைய நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும்போது, யதார்த்தமாக, பாலி மொழியின் உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை உச்சரிக்குமாறு கேட்டேன். அவர் இந்தியாவிற்கு இதுவரை வந்ததே இல்லை, மேலும் அவருக்கு தமிழ் மொழி பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், பாலி மொழியின் உயிர்மெய் எழுத்துகளை அவர் சொன்னபோது, அவை தமிழ் மொழியின் அத்தனை உயிர்மெய் எழுத்துக்களை போல இருந்தது.
இதிலிருந்து, பண்டைய கால தமிழர்கள் அந்த தீவுகளுக்கு சென்று நமது கலாச்சாரத்தையும், மொழியையும் பரப்பி இருக்கின்றார்கள் என்பதையும் இன்னும் அந்த நாட்டு மக்கள் அவற்றையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிகிறது. பாலி மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தலைப்பாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். எனவே, கடல் காற்றை பற்றியும், நீரோட்டங்கள் பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல் நாகப்பட்டினத்திலிருந்து நாலாயிரத்து ஐநூறு கி.மி தொலைவுள்ள பாலி தீவுக்கு பழந்தமிழர்கள் சென்று இருக்க இயலாது.
பண்டைய தமிழரின் கடல் வாணிகத்தில் கடல் நீரோட்டங்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகித்திருக்க கூடும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
ஒரு பாய்மர கப்பலில் தமிழகத்திலிருந்து கடல் வழியாக பர்மா செல்ல வேண்டுமானால் தென்னங்காற்று (தென்கிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் ஓடும் உறுதியான தெண்டி வெள்ளத்தை (தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி எளிதாக சென்றிருப்பார்கள். அது போலவே, பர்மாவிலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வர வாடை காற்று (வடகிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் கடலில் ஓடக்கூடிய வலிமையான வன்னி வெள்ளத்தை (வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி வந்து சேர்ந்திருப்பார்கள். தெண்டி வெள்ளம், வன்னி வெள்ளம் போன்ற பழந்தமிழ் வார்த்தைகள் இன்றும் தமிழக மீனவர்களால் பயன்படுத்தபடுகின்றன. மேலும், எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட படி பல வகையான கடல் மீன்களின் தமிழ் பெயர்களும் காலம் காலமாக இன்னும் மீனவர்களிடையே வழக்கில் இருந்து வருகின்றன. ஆனால், தற்போது அதிகரித்து வரும் சுற்று சூழல் சீர்கேட்டால், தமிழக கடலில் ஒரு மீன்வகை அழிந்து விட்டால், அத்துடன் ஒரு பழந்தமிழ் சொல் பயன்பாட்டையும் நாம் முற்றிலும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கின்றேன்.
பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு என மற்ற எல்லா காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்தமாக பார்க்கும்போது, இன்று இந்த பகுதியில் வெட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம் பாதியில் நின்று போனதற்கு இந்த அதிவேக நீரோட்டங்களும் ஒரு முக்கிய காரணமாகும். அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாயும், எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயும் வெற்றிகரமாக இயங்கும்போது சேது சமுத்திர கால்வாய் மட்டும் ஏன் கடினமான பணியாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்?
இதை ஒரு எளிமையான உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறேன். இரண்டு குளங்களை இணைப்பதற்கு நிலத்தில் வெட்டப்படும் வாய்க்கால் போல இரண்டு கடல்களை இணைக்க நாம் வாழக்கூடிய நிலத்தில் வெட்டப்பட்டவைதான் இந்த சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் ஆகும். அதனால், அவற்றின் கரைகள் உறுதியாக இருக்கின்றன .
ஆனால், சேது சமுத்திரம் திட்ட பணியானது, நம் கொள்ளிடம் ஆற்றில் முழுவதும் தண்ணீர் போய்கொண்டு இருக்கும்போது, ஆற்றின் நடுவில் ஒரு அடி அகலத்திற்கு சிறு வாய்க்காலை நீங்கள் வெட்ட முயற்சிப்பது போல ஆகும். எத்தனை தடவை கடினமாக உழைத்து நீங்கள் மண்ணை அள்ளி கொட்டினாலும், ஆற்றின் நீரோட்டம் மணலால் மீண்டும் அதை எளிதாக மூடிவிடும். அதை போல, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அடியில் உள்ள மணலில் எத்தனை முறை கால்வாய் வெட்டினாலும் சக்தி வாய்ந்த கடல் அடிப்பகுதி நீரோட்டங்கள் எளிதாக அதை மூடிவிடும். ஏனெனில் கடலுக்கு அடியில் ஒரு இடம் பள்ளமாக இருக்க வேண்டுமா அல்லது மேடாக இருக்க வேண்டுமா என்பதை கடல் நீரோட்டங்கள்தான் நிர்ணயிக்கின்றன.
கட்டுரையை எழுதியவர்
டாக்டர். வே. பாலாஜி
கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்
பட்டுக்கோட்டை
Wednesday, January 26, 2011
Sunday, January 16, 2011
beautiful spider
Sunday, December 26, 2010
Friday, November 19, 2010
புதிய வகை வெளிநாட்டு மீன் கண்டுபிடிப்பு
நவம்பர் 14 ஆம் தேதி (14th November 2010) அன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மணிசத்திரம் கிராமத்தை சேர்ந்த அரும்பு என்ற மீனவர் அங்குள்ள வண்ணான் ஓடை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது சுமார் ஒரு அடி நீளமுள்ள புதிய வகை கெழுத்தி மீன் வலையில் சிக்கியது. அவர் அந்த மீனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலிடம் ஒப்படைத்தார். அவர் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்திற்கு அளித்த தகவலின் பேரில், டாக்டர்.வே.பாலாஜி அந்த மீனை ஆய்வு செய்தார்.
டாக்டர். வே.பாலாஜி அளித்த தகவலின்படி இந்த மீனுடைய அறிவியல் பெயர் டீரோகோபிளிதைஸ் பர்டாலிஸ் என்பதாகும். இது லோரிகாரிடே என்ற உடல் முழுவதும் கவசம் போன்ற தோல் கொண்ட கெழுத்தி வகையை சேர்ந்த மீன் ஆகும். தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் நம் பகுதியில் கண்டுபிடிக்கபட்டது ஆச்சரியமான விஷயமாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அழகு மீன்களாக வளர்க்கப்படுவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. அப்படி இந்தியாவிற்கு வந்த இந்த மீன்கள் இங்குள்ள ஆறு குளங்களில் உயிருடன் தெரிந்தோ தெரியாமலோ விடப்படும்போது, அவை இனப்பெருக்கம் செய்து மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. இதற்கு முன்பு இந்த வகை மீன்கள் தமிழகத்தின் வேறு சில ஊர்களிலும், கேரளாவில் உள்ள திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள நன்னீர் பகுதிகளிலும் கண்டரறியப்பட்டுள்ளன.
மேற்கண்ட அம்மணிச்சத்திரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு கெழுத்தி மீன், குளத்தின் அடிப்பகுதியில் உள்ள பாசி மற்றும் சேற்றில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடியதாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அதிகமாகும்போது, இங்குள்ள விரால் மீன் போன்ற மற்ற மீன்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும். இங்கு இயற்கையாகவே உள்ள மீன்களின் முட்டையை இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் சாப்பிடகூடிய வாய்ப்பு உள்ளதால் குளம், ஏரி போன்ற நன்னீர் பகுதிகளில் உள்ள மீன்வளமும் பாதிக்கப்படக்கூடும். மேலும், ஓடு போன்ற கடினமான இந்த மீனின் உடல் பகுதி மீனவர்களின் வலையை சேதப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது .
உலகம் முழுவதும் இந்த மீன்களை போன்ற உயிருள்ள விலங்குகளையும் தாவரங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு இயற்கையாகவே உள்ள தாவர, விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிலிப்பின்ஸ் நாட்டில் ஜானிடர் மீன்கள் என்று அழைக்கப்படும் இந்த மீன்கள், அங்கு இயற்கையாகவே உள்ள மற்ற மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக செய்திகள் உள்ளன.
இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் தற்போது குறைந்த எண்ணிகையிலயே உள்ளதால், இவற்றின் மூலமாக தமிழகத்தில் உள்ள நன்னீர் குளங்களிலும், ஏரிகளிலும் உள்ள மற்ற மீன் இனங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படபோகும் பாதிப்பு பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Monday, November 15, 2010
Tuesday, October 26, 2010
Sea Turtle Saved by OMCAR team
Wednesday, October 6, 2010
Tuesday, July 6, 2010
தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு
2009 மே மாதம் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் உள்ள அரிய வகை மரங்கள் பற்றியும்,அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் ஏரிப்புரக்கரை,சேதுபாவாசத்திரம்,சம்பைபட்டினம்,அம்மணிசத்திரம்,செந்தலை வயல்,அடைகத்தேவன்,மகிழங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மகாலிங்க மரம்,மகிழ மரம்,இழுப்பை மரம்,மருது மரம்,லெசேட்டை மரம், வெப்பாலை மரம் ,பின்னை மரம்,விலா மரம் மற்றும் குதிரை மரம் போன்ற ஒன்பது வகை மரங்கள் இருப்பது தெரியவந்தது.
மகாலிங்க மரம் :
இது ஏரிப்புரக்கரை கிராமத்தில் உள்ள வழுதியம்மன் கோவில் அருகில் உள்ளது.இதன் விதை லிங்க வடிவில் உள்ளது.இது சிவன் கோவிலுக்கு உரிய மரம் என்றும் சொல்லப்படுகிறது. இது கோவில் சார்பில் பரமரிக்கப்படுகிறது. இது இப்பகுதியில் எங்கும் காண இயலாத மரம் என்று சொல்லப்படுகிறது.

மகிழமரம்:
இம்மரம் சேதுபாவசத்திரத்தில் உள்ள சத்திர வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும், இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூவில் காய்ந்த பிறகும் நறுமணம் வீசும் என்றும்,இது மகிழவனேஸ்வரர் என்ற சொல்லப்படும் சிவனுக்கு உரிய பூ என்பதால் ஆகவே இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இழுப்பைமரம்:
இம்மரம் அம்மணிசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.இம்மரத்தின் பூ இனிப்பு தன்மை உடையதாக இருக்கும்.இதன் பூவை காய வைத்து பொடி செய்து சர்க்கரைக்கு பதிலாக பயன்படுதப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் இலைகளை ஆடுகள் நன்றாக சாப்பிடுவதால் கிராம மக்கள் இதன் இலைகளை கால்நடைகளுக்கு உணவாக வெட்டி விடுகின்றனர். எனவே இம்மரம் இலைகள் அதிகம் இல்லாமல் காணப்படுகிறது.
மருதுமரம்:
இம்மரம் செந்தலைவயல் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது.இம்மரத்தின் பட்டை கொய்யா மரத்தின் பட்டையை போன்று உள்ளது.இதன் இலையை தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் வெப்பத்தை தணிப்பதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
வெப்பாளைமரம்:
இம்மரங்கள் அடைக்கத்தேவன் மற்றும் செந்தலைவயல் கிராமங்களுக்கு இடையில் ECR ரோடு அருகில் அதிகளவில் உள்ளது.இதன் விதைகள் காற்றில் வெடித்து சிதறி பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.இம்மரத்தின் பட்டையின் சாரானது புண்களையும்,தோல்வியாதிகளையும் குணப்படுத்துவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

பின்னைமரம்:
இது அடைக்கத்தேவன் கிராமத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. இம்மரம் மணற்பங்கான இடங்களில் மட்டுமே வளரும் என்று கூறப்படுகிறது.இதன் இலைகள் முந்திரி மரத்தின் இலைகள் போன்று காணப்படுகிறது.இம்மரத்தின் இலைகளை ஆடுமாடுகள் மேய்வது இல்லை.

பின்னை மரம்
பின்னைமரக்காய்
லெசேட்டைமரம்:
இம்மரம் சம்பைபட்டினம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது.இதன் பழம் திராட்சை பழத்தை போன்று கொத்து கொத்தாய் காணப்படுகிறது.இம்மரத்தின் இலைகளை கீரையாக சமைத்து சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.இம்மரத்தில் பால் வடியும்,ஆதலால் ஆடுமாடுகள் குட்டி போட்டவுடன் அதன் நஞ்சு கொடியை [தொப்புள் கொடியை] இம்மரத்தில் கட்டுகின்றனர்.இதனால் ஆடுமாடுகளில் பால் அதிகம் சுரப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

விளாமரம்
இம்மரம் மகிழங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது.இதன் காய் துவர்ப்பும்,புளிப்பும் உடையதாக உள்ளது.


குதிரைமரம்:
இம்மரம் இராஜாமடம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை கிராமத்திற்கு சொந்தமான அய்யனார் கோவிலில் அமைந்துள்ளது.இதன் காய் வெடித்து சிதறும் தன்மை கொண்டதாக உள்ளது.

Saturday, April 17, 2010
Today (17th April 2010), I received a phone call from our volunteer. He informed about the dead marine mammal in Mallipattinam coast, in northern Palk Bay. After 40 minutes of driving my bike, I reached the site in a very hot day. I took some pictures and it was my first experience to see this beautiful creature. It was 4.4 feet length and weighed about 30 kg. It was black colored with wounds on the upper side of the body. Fishers suggest that it might be entangled trawler nets. It is a very peaceful marine mammal. I have seen this, for the first time in my life, but it was dead. Finless porpoise found both east and west coast of India. Not much study is carried out about Porpoise like Dolphins.
Scientific name of Finless Porpoise is Neophocaena phocaenoide. They are more shy than dolphins, more likely to disappear when encountered, preferring not to surface around boats and humans, or jump out of the water, as dolphins do. In comparison to dolphins, porpoises are very small. Porpoises seldom exceed 7 feet in length, whereas many dolphins can exceed 10 feet in length. Porpoises are also more robust than dolphins. Dolphins have a lean sleek body, whereas porpoises often appear chubby. The dorsal fin of the dolphin is shaped in a wave. Porpoises lack a rostrum or a beak. This rostrum is very prominent in dolphins. The teeth of the porpoise are spade-shaped, whereas the teeth of the dolphin are conical or cone-shaped.
Many porpoises do not live past their mid-teens. Porpoises have an intensive reproduction schedule that may play a role in their lack of longevity. A porpoise can become pregnant each year, give birth, and then it can become pregnant again five or six weeks later, so it can be nursing and pregnant at the same time. This can also happen in dolphins, but dolphins are larger in size and it seems their body is suited for handling such occurrences, and anyhow it is less common. Dolphins can live in an upwards of fifty years.
Adult Finless Porpoises are a uniform light grey colour. Newborn calves are mostly black with grey around the dorsal ridge area, becoming fully grey after 4–6 months. Adults grow more than 1.55 m (5 ft) in length and up to 30–45 kg (65–100 lb) in weight. Males become sexually mature at around 4–6 years of age, and females at around 6–9 years of age.
Since this species is the most coastal of all porpoises, it has the most interaction with human. This interaction often puts the Finless Porpoise at risk. Like other porpoises, large members of this species are killed by entanglement in gill nets.
Wednesday, March 10, 2010
Living Lagoon....March 2010
10th March 2010
With fresh cold air and rising sun, the muthupet mangrove forest has showed again its enchantic view that lured my mind to walk with my DSLR... some clicks are here...

These two mangroves are established on the sediment that was accumulated by the oysters. Floating seeds caught in the oyster bed to form the trees. I can remember that there was no such mangrove thickets in the year 2000 except some small seedlings, when I frequently visited here for my research. Vigorous growth of these (about 10 year old mangroves) are showing a good sign of extension of the forest, at the same time it also shows that the rate of sedimentation is increased in this lagoon due to erosion in catchments. Fishers told that they did not need shoes to walk in the creeks and lagoon 10 years before. Now, every fisher is wearing a shoe to protect him from the oysters which has been proliferating in the last decades.
These two fishermen have no boat to reach the this creek. They have to travel up to 5 kilometers to reach this creek area from their village. So, they depend on boat owned fishers who drop them in the creeks.
This fisher is holding two catfishes that are available only in monsoon and post monsoon season. (see below)
An Egret. See the backward, the mangroves are slowly stressed to leave from the creek by the spiny,bushy plant of Prosophis juliflora.
We found a big honey comb of 2 foot in Thiilai maram (E.agallocha) . The bees seems to be unusual in size. This swarm can kill a person.
A fishermen in Muthupet Lagoon. This old fisher is not standing, but floating on the water. He use buoyancy of the car tube and the big aluminium pot to prevent from sinking.

















