Wednesday, March 18, 2015
Wednesday, March 4, 2015
OMCAR Received India Geospatial Excellence Award.
OMCAR Foundation received this award on 10th February 2015 during India Geo spatial Forum 2015, held at Hyderabad International Convention Center. This national award is given for our project funded by Ministry of Science and Technology, Government of India. Thanks to all my co workers, volunteers, villagers and Government of India. For more information about this project click here http://omcar.org/user/research.aspx?ID=7
Received the award from Hon. Secretary of Ministry of Earth Science, Government of India
India Geospatial Forum 2015
Received the award from Hon. Secretary of Ministry of Earth Science, Government of India
our exhibition stall
our exhibition stall
our exhibition stall
Sunday, January 11, 2015
Saturday, January 10, 2015
Mangroves Planted by us now becomes small mangrove thickets
Wednesday, December 3, 2014
Thursday, October 16, 2014
Solo Beach Walk...
I thought to observe shoreline seagrasses in local beach.
It was pleasant weather, and I found very shallow seagrass beds of H. pinifolia. The meadow is in stress with algae coverage. Several shrimp farms located around are dumping their nutrient rich waste water that proliferates algal growth on natural seagrass beds. This site is located very close to an outlet.
An underwater view showing how the seagrass beds is in stress by algae, which blocks sunlight making weaker, unhealthy meadows. Such situations slowly replace seagrass into algal bed.
Seaward edge of the bed showing some healthy leaves
This sandy shoreline occur in between algal and seagrass meadows. Local fishers told that our coastal areas was covered by such sandy bottom few decades ago, where shoreline seagrass meadows were vast in size and healthy.
After an hour, an unexpected clouds dimmed sunlinght.
Our coastal waters in Palk Bay is enriched by nutrients by the decomposed seagrasses
Back home, as nature decided enough today.
Sunday, October 12, 2014
Thursday, October 2, 2014
முறல் மீன்கள் மனிதர்களை தாக்குமா?
வெப்பமண்டல நாடுகளில் பரவி உள்ள முறல் மீன்கள், தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக
அளவில் காணப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள கடல்
தாழைகள் இவ்வகை மீன்களுக்குபாதுகாப்பான வாழிடத்தையும், உணவையும் அளிப்பதால், முறல் மீன்கள் தங்கள் முட்டைகளை கடல் தாழைகளில் இட்டு இனபெருக்கம் செய்ய பாக் ஜலசந்தி பகுதி மிகவும் வசதியாக உள்ளது.
உயிரின வகைபாட்டின்படி கோலா மீன்களுக்கு
நெருங்கிய உறவான இவ்வகை மீன்கள் மிக நீண்ட உடலையும், கூர்மூக்கும்
கொண்டுள்ளன. முறல் மீன்கள் ஆங்கிலத்தில்
NEEDLE FISH என்று அழைக்கபடுகின்றன. முறல் மீன்களில் பிள்ளை முரல், நெடுமுறல்,
கட்டை முரல், அல முரல், வால முரல் மற்றும் வாடைய முரல் போன்ற வகைகள் தஞ்சை மாவட்ட
பகுதிகளில் காணப்படுகின்றன . இதில் பிள்ளை முரல் மற்றும் கட்டை முறல் போன்றவை
கீழ்தாடைகள் நீண்டு கூர்மையாகவும், மேல்தாடைகள் சிறியதாகவும் இருக்கும். நெடுமுறல், வாலமுறல், வாடைய முரல் போன்றவைகளின்
மேல் மற்றும் கீழ் தாடைகள் இரண்டும் கூர்மையாக இருக்கும். அல முறல் வகைகள் தற்போது மிகவும் அரிதாக
காணப்படுகின்றன. பிள்ளை முறல் (ஆள் பாய்ஞ்சான் முறல்) பச்சை நிறத்துடன், உருண்டையான
உடலமைப்புடன் இருக்கும்.


(Photo: http://www.mexfish.com/mexico/flat-needlefish/)
கடல் நீரின் மேல் பகுதியை ஒட்டியே நீந்தும் முறல் மீன்கள் சிறு கடல் உயிரினங்களையும், சிறிய மீன்களையும் உணவாக உட்கொள்ளும்.
கூரிய உடலமைப்புடன், நீரின் மேல்பகுதியில் எப்போதும் இவை இருப்பதால், வேகமாக
செல்லும் படகுகள் அல்லது வெளிச்சத்தால் அச்சமடைந்து நீரை விட்டு காற்றில் எளிதாக எழும்பி
வேகமாக பாய்ந்து செல்லும் தன்மை கொண்டவை.
சுமார் 30 – 35 கிமி வேகத்தில்
பாய்ந்து செல்லும் இவை, எதிரே வேகமாக வரும் படகில் நின்று கொண்டு இருக்கும்
மனிதரின் உடலில் பாயும்போது மிக பலத்த அல்லது பலத்த காயத்தை ஏற்படுத்தும். சுமார்
ஒரு மீட்டர் வரை கூட வளரும் முறல்மீன்கள் இவ்வாறு பாய்ந்தால், மூக்குபகுதி கத்திபோல்
உடலை துளைத்து பின் முறிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தலாம். இவ்வகை நிகழ்வுகள்
மிகவும் அரிதாக ஏற்பட்டாலும், இதனால் உலக அளவில்
மனிதர்கள் உயிரிழந்த சில சம்பவங்களும் நடந்துள்ளன. வியட்நாமில் இதயத்தில் துளைத்த முறல் மீனால்
சிறுவன் உயிரிழந்ததும், ஹவாய் தீவுகளில் கண்ணில் வழியாக மூளைக்குள் பாய்ந்த முறல் மீன் உயிரிழப்பை எற்படுத்தியதியும் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவில் ஒரு பெண்
கடலில் நீந்தும்போது ஏற்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. அப்பெண்ணின் கழுத்து பகுதியில் பாய்ந்த முறல் மீன் பெரிய அளவில் காயத்தை
ஏற்படுத்தியதாக தெரிகிறது, எனினும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்
காப்பற்றப்பட்டுள்ளார். நீருக்கு அடியில்
ஸ்கூபா டைவிங் செய்ய்ம்போதும், கடல் பரப்பில் நீந்தும்போதும் இவ்வகை மீன்கள்
மனிதர்களின் உடலில் பாய்ந்து காயம் ஏற்படுத்திய சம்பவங்களும் பல நடந்துள்ளன. சமிபத்தில்
தஞ்சை மாவட்ட அதிரம்பட்டினத்தில், ஒரு மீனவர் முறல் மீனால் தாக்கபட்ட சம்பவம் நடந்துள்ளது.
(Photo: http://www.mexfish.com/mexico/flat-needlefish/)
முறல் மீன்கள் மனிதர்களை வேண்டுமென்றே தாக்குவதில்லை. ஆபத்துகளிலிருந்து தங்கள் உயிரை காத்துக்கொள்ள இயற்கையாகவே காற்றில் எழும்பி பாய்ந்து செல்லும் திறனை அவை பெற்றுள்ளன. மனிதர்களுடன் அப்போது ஏற்படும் எதிர்பாராத விபத்து காரணமாகவே, முறல் மீன்கள் மனிதரகளை துளைத்து காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலான முறல் மீன்கள் இந்த விபத்தில் மனிதர்கள் அல்லது படகுகள் மீது மோதியவுடனேயே இறந்து விடுகின்றன.
முறல் மீன்கள் மனிதர்களை வேண்டுமென்றே தாக்குவதில்லை. ஆபத்துகளிலிருந்து தங்கள் உயிரை காத்துக்கொள்ள இயற்கையாகவே காற்றில் எழும்பி பாய்ந்து செல்லும் திறனை அவை பெற்றுள்ளன. மனிதர்களுடன் அப்போது ஏற்படும் எதிர்பாராத விபத்து காரணமாகவே, முறல் மீன்கள் மனிதரகளை துளைத்து காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலான முறல் மீன்கள் இந்த விபத்தில் மனிதர்கள் அல்லது படகுகள் மீது மோதியவுடனேயே இறந்து விடுகின்றன.
எனவே, முதலுதவி பொருட்களை கடலுக்கு செல்லும்போது கொண்டு செல்வது மிகவும் அவசியமாகும். முறல் மீன்கள் உடலில் பாய்ந்து விட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவேண்டும். சிறிய அளவிலான காயம் ஏற்பட்டாலும் கூட, கூர்மையான பற்களும் மூக்குபகுதியும் சிறு சிறு துண்டுகளாக உடைந்து விடும் தன்மை இருப்பதால் அவற்றை முற்றிலும் மருத்துவரை கொண்டு அகற்றுவது அவசியமாகும்.
கட்டுரை
முனைவர். வே. பாலாஜி, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், பட்டுக்கோட்டை
Thursday, June 19, 2014
Tamil Nadu State - 2014 - Aringar Anna Environment Award
Tuesday, December 10, 2013
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறைகள்
தினத்தந்தியில் கடந்த 1.12.2013 அன்று வெளியான எனது கட்டுரை (before editing)
கள அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை
Dr.V.பாலாஜி, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், ஓம்கார் பௌண்டேஷன்
பட்டுக்கோட்டை
மீன்களின்
முக்கியத்துவமும், மீன்வள குறைவும்:
கடல் மீன்கள் நமது உடல்
வளர்ச்சிக்கு தேவையான புரதசத்துக்களை அளிக்கின்றன. சைவ உணவு வகைகளில் சிறிதளவே காணப்படும் அமினோ
அமிலங்கள் கடல் மீன்களில் அதிக அளவில் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு மீன்கள்
முக்கிய பங்காற்றுகின்றன. மீன் பிடி
தொழில் நம் நாட்டிற்கு பலகோடி ரூபாய், அந்நிய செலாவணியை அளிப்பதால், நாட்டின்
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன. எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் கடல் மீன் பிடி தொழில்
தமிழகத்தில் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாறி வரும் தட்ப வெப்ப நிலையாலும், வரம்பு
மீறிய மீன்பிடி முறைகளாலும் மற்றும் அதிகரிக்கும் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கையாலும் மீன் வளம் பெரிதும்
பாதிக்கபட்டுள்ளது.
செயற்கை பவளப்பாறைகளும் அதன் பயனும் :
நம் தமிழக கடலுக்கு அடியில்
உள்ள மீன் உற்பத்தி இடங்கள் மற்றும் வாழிடங்கள் போன்றவற்றை பாதுகாத்து, அவற்றின்
உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறைகளை வகுப்பதன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கே
மீன்கள் அதிகம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்புகளில் ஒன்றாக செயற்கை
பவளப்பாறைகளை உருவாக்குதலை எடுத்துக்கொள்ளலாம்.
பவளப்பாறைகள் என்பவை கடலுக்கு அடியில் மீன்கள் உற்பத்தியாகி, வாழும்
இடமாகும். இத்தகைய இயற்கை பவளப்பாறைகள்
எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. இவ்வாறு, இயற்கையான பவளப்பாறைகள் இல்லாத
இடங்களில், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதன் மூலம், மீன்பிடி தொழிலை மேம்படுத்த
முடியும். பல்வேறு நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், சிறு
மீன்களுக்கு மறைவிடமாகவும் பயன்படுகின்றன. செயற்கை பவளப்பாறைகளில் வாழும் சிறு
மீன்களை வேட்டையாட கொடுவா, சீலா, திருக்கை போன்ற பெரிய மீன்கள் வருவதால் மீன்கள் எப்போதும்
கூட்டமாக அங்கு காணப்படும். எனவே, இதனை கருத்தில் கொண்டு மத்திய மீன்வள ஆராய்ச்சி
மையத்துடன் இணைந்து தமிழக மீன்வளத்துறை தமிழகத்தின் ஆறு கடலோர மாவட்டங்களில் கடலுக்கு
அடியில் செயற்கை பவளப்பாறைகளை இட்டுள்ளது.
இவற்றை தயாரிக்க சிமெண்ட் மற்றும் கம்பியை வார்ப்பு அச்சுகளில் இட்டு முக்கோணம்
மற்றும் வட்ட வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, உலர்த்தி பின்பு படகுகளின் மூலம் கடலுக்குள்
போடப்படுகின்றன. அதில் ஒருபகுதியாக, தஞ்சை
மாவட்டத்தில் சேது பாவா சத்திரம் மற்றும் மனோரா போன்ற இடங்களில் கரையிலிருந்து சுமார் ஏழு
கிலோமீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் போடப்பட்டன.
கடலுக்குள் ஆராய்ச்சி செய்த முறை:
மீனவர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த உண்மையில் இவை எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை உறுதி
படுத்த, ஓம்கார் பௌண்டேஷன் சார்பில் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் பாலாஜியால்
மீன் வளத்துறையின் உதவியோடு கடந்த ஒரு வருடமாக, தஞ்சை மாவட்ட கடலுக்கு அடியில்
ஆய்வு மேற்கொள்ளபட்டது. இந்த ஆய்விற்காக
இரும்பினால் செய்யப்பட்ட சட்டத்தில், ஒரு சிறிய நீர்புகா டிஜிட்டல் வீடியோ கேமரா
பொருத்தப்பட்டது. கேமராவின் முன்பகுதியில்
சுமார் ஒன்றரை மீட்டர் தூரத்தில், மீன்களுக்கான இரை கட்டப்பட்டு, அதனருகில் ஒரு
ஸ்கேல் பொருத்தப்பட்டது. கடலுக்குள் சுவாச கருவிகளுடன் (scuba diving) இறங்கி செயற்கை
பவளப்பாறைகள் உள்ள இடங்களில் இக்கருவியை பொருத்தி ஆய்வு செய்யபட்டது. இந்த கருவியில் பொருத்தப்பட்ட இரையை சாப்பிட மீன்கள்
வரும் போது, அவை கேமராவில் பதிவு செய்யபட்டு அவற்றின் வகைகள், எண்ணிக்கை மற்றும் உடல்
நீளம் போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்யபட்டது.
இதே கருவியை, கடல் தாழைகள் மற்றும் கடல் பாசிகள் உள்ள இடங்களிலும் இறக்கி அங்குள்ள
மீன்களை செயற்கை பவளப்பாறை பகுதியில் உள்ள மீன்களோடு ஒப்பிடப்பட்டது.

கடல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு
இந்த ஆராய்ச்சியில், கடல் தாழைகள் மற்றும் கடல் பாசிகள் இருக்கும்
இடங்களை விட செயற்கை பவளப்பாறைகள் இருக்கும் இடங்களில் அதிக மீன்கள் இருப்பதை
கண்டறிய முடிந்தது. செயற்கை
பவளப்பாறைகளில், இருபது வகையான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்களான ஊடகம், ஊளி, கிளாத்தி, ஓரா, செப்பிலி, கொடுவா,
நெத்திலி, கீலி, செங்கனி, களவா, பன்னா, குதிப்பு, கிழங்கான், வாவல், குமுளா,
கூறல், பருத்தி வெளமீன், கிளிமீன் மற்றும்
விளமீன் போன்றவை அதிக எண்ணிக்கையில் இருந்தன. இவற்றில் கீலி மீன் பெரிய மீன்களை
பிடிப்பதற்கு தூண்டில் இரையாக பயன்படுகிறது, மற்ற அனைத்து மீன்களும் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு சந்தையில் நல்ல விலை போகக்கூடிய மீன்களாகும். கடலில் இயற்கையாக மீன்கள் உற்பத்தியாகும் இடமாக
விளங்கும் கடல் தாழைகளில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் இருந்தன. மேலும், அங்கு ஊடகம், ஊசி கனவா, ஓட்டு கனவா,
சீலா, ஓரா, செப்பிலி, கொடுவா, முரல், நெத்திலி, விளமீன், கீலிமீன், தாழஞ்சுறா,
செங்கனி போன்ற மீன்கள் கண்டறியப்பட்டன.
கடல் பாசிகள் உள்ள இடங்களில் ஓட்டு கனவா, ஓரா, கெடுத்தை மற்றும் கீலி போன்ற
நான்கு வகை மீன்கள் கேமராவில் பதிவாகி இருந்தன.
இந்திய இலங்கைக்கு இடைபட்ட பாக் ஜலசந்தி பகுதியில் செய்யப்பட்ட இந்த ஆய்வு
முடிவுகளின் படி, செயற்கை பவளப்பாறைகளினால் கடலில் உள்ள மீன்கள் கவரப்பட்டு
ஓரிடத்தில் கூட்டமாக இருப்பதையும், இயற்கையான கடல்தாழைகள் மற்றும் கடல் பாசிகளை
விட வகை வகையான, அதிக எண்ணிக்கையில் மீன்கள் இருப்பதையும் கண்டறிய முடிந்தது. மேலும், இப்பகுதியில் உள்ள சிறு, குறு
மீனவர்களுக்கு வருமானத்தை தரும் அடிப்படை ஆதாரமாக இது விளங்குகிறது. இங்குள்ள மீனவர்களை கேட்டதில், செயற்கை
பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் மீன்கள் கூட்டமாக இருப்பதையும் அதை சுற்றியுள்ள
பகுதிகளில் மீன்பிடிக்கும்போது நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கூறினார்கள்.

முடிவுரை:
பொதுவாக, நம் தமிழக
மீன்வளங்கள் குறைந்துள்ளதால், மீனவர்கள் நீண்ட தூரம் சென்று இலங்கை கடற்படையால்
தாக்கபடுவதும், சிறைபிடிக்கபடுவதும் தொடர்கதையாகி வரும் சூழலில், அதற்கு மாற்று
வழி காணும் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக இதை போன்ற செயற்கை பவளப்பாறைகளை மேலும்
உருவாக்கி மீன்வளங்களை பெருக்கவும், மீன்பிடிதொழிலை காக்கவும் முடியும் என்பது இதன்
மூலம் உறுதியாகிறது. எனினும், செயற்கை பவளப்பாறைகள் போடப்படும் இடங்கள்
தேர்ந்தெடுக்கபடும்போது, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களால் கடலுக்குள் இறங்கி
ஆராய்ச்சி செய்யப்பட்டு, அப்பகுதி மீனவர்களுடன் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும்.
இதன் மூலம், இயற்கையாக அங்குள்ள கடல் தாழைகள் மற்றும் பிற உயிரினங்கள்
பாதிக்கப்படாமல் மீன்வளத்தை பெருக்கலாம். மேலும்,
கடலுக்குள் போடப்பட்ட செயற்கை பவளப்பாறைகள் சேதப்படுத்தப்படாமல் பாதுகாத்தால், அவை
தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாராமாக எப்போதும் விளங்கும்.

Subscribe to:
Posts (Atom)





















